;
Athirady Tamil News

யாழில். 45 நாள் குழந்தை உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த துஸ்யந்தன் தனுசியா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது

குழந்தைக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக 17ஆம் திகதி யாழ் .போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மாலை சிகிச்சை பலனின்றி குழந்தை
உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.