;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை: கைது செய்யப்பட்ட இருவர்!

0

அலட்சியம் காரணமாக குழந்தை இறந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

பிரித்தானியாவின் பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள கிளிண்டர்வெனில்(Clynderwen) அலட்சியம் காரணமாக 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் நலன் கருதி அக்டோபர் 18ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு, வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில். இந்த சம்பவத்தில் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது அறிவிக்கப்பட்டது.

குழந்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது போன்ற காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

இரண்டு பேர் கைது
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையை புறக்கணித்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயது ஆண் மற்றும் 19 வயது பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக Dyfed-Powys காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.