;
Athirady Tamil News

கிளிநொச்சியில் படுகாயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு

0

கிளிநொச்சி, வேரவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பஞ்சாட்சரம் மவுதீஸ்வரன் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 11ஆம் திகதி வேரவிலில் இருந்து முழங்காவிலுக்குச் செல்லும் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சையின்போது நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.