;
Athirady Tamil News

பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

0

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

738,659 அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி
அவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் 738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.