;
Athirady Tamil News

12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் – மருத்துவர்கள் செய்த சம்பவம்!

0

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கத்தரிக்கோல்
சிக்கிம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அதன் காரணமாக காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரை சோதனை செய்து வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது. அதை அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,

மருத்துவர்கள்
12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவ குழு, அந்த பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையைநடத்தி வயிற்றிலிருந்த 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் அந்த பெண் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.