;
Athirady Tamil News

தனது வீட்டில் இறந்துகிடந்த பதின்பருவ பெண்: 16 வயது பிரித்தானிய சிறுவன் கைது

0

இங்கிலாந்தில் பதின்பருவ பெண் இறந்து கிடந்தது தொடர்பில் 16 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பதின்பருவ பெண்

பிரிஸ்டலின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பகுதியில் இருந்து மாலை 6.23 மணியளவில் அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் பதின்பருவ பெண் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இறந்த யுவதியின் உடலைக் கைப்பற்றினர்.

அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்திலேயே 16 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார் அவரை காவலில் வைத்துள்ளனர்.

தடயவியல் பிரேத பரிசோதனை
யுவதியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் பிரேத பரிசோதனை எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தலைமை காவல் அதிகாரி Vicks Hayward-Melen கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக ஒரு இளம் பெண் தனது உயிரை இழந்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இருக்கும்.

சிறப்பு குடும்ப தொடர்பு அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். மேலும் எங்கள் விசாரணையில் அவர்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு அதிக ஆபத்து இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.