;
Athirady Tamil News

ஜேர்மனியும் பிரித்தானியாவும் செய்துகொள்ளவிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம்

0

பிரித்தானியாவும் ஜேர்மனியும் விரைவில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.

ஜேர்மனி பிரித்தானிய ஒப்பந்தம்

இந்த வாரத்தில், ஜேர்மனியுடன் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலான ஒப்பந்தமாகும் அது.

நேட்டோ அமைப்பின் ரஷ்யாவுடனான கிழக்கு எல்லையில், குறிப்பாக, எஸ்தோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் ஜேர்மனியுடன் இணைந்து பிரித்தானிய படைகள் ராணுவ பயிற்சிகளில் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

இதற்கிடையில், பிரித்தானியா, பாதுகாப்பு, உளவுத்துறை தகவல்கள் பகிர்வு, ஆற்றல் ஒத்துழைப்பு மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.