;
Athirady Tamil News

வீட்டில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்! குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்

0

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டிற்குள் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் இதுகுறித்து கூறும்போது சிகந்திராபாத் பகுதியில் இரவு 8.30 முதல் 9.00 மணிக்குள் இச்சம்பவம் நடந்துள்ளது என்றனர்.

அதேபோல் மீரட் மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் துருவா காந்த் தாகு கூறுகையில், “புலந்த்ஷாஹர் மாவாட்டதின் சிகந்திராபாத் காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு காலனியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் , சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.