;
Athirady Tamil News

ஷூ கவரை தலையில் அணிந்த சுகாதாரத்துறை அமைச்சர்.., தொடரும் விமர்சனங்கள்

0

பீகார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது தலையில் ஷூ கவரை அணிந்திருந்ததால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஷூ கவர்

இந்திய மாநிலமான பீகாரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. இவர், பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். ஆனால், அவர் அதனை கவனிக்காமல் தலையில் அணிந்துள்ளார்.

இவரின், மருத்துவமனை புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுக்கு சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை சுகாதார ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

அவரும் எதுவும் தெரியாமல் ஷூ கவரை அணிந்துள்ளார். நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.