;
Athirady Tamil News

யாழ். தாவடிச் சந்தியில் 5 நாட்களாக நிற்கும் கார் – காவல்துறை விசாரணை

0

யாழில் அநாதரவாக 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தொடர்பாக காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) – காங்கேசன்துறை வீதியில் தாவடிச் சந்திக்கு அருகே இந்த கார் வீதியோரம் அநாதராவாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (22.10.2024) காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிமையாளர் யார்
இந்நிலையில் காரின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளமையால் காரை காவல்துறையினரால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

எனினும், ஐந்து தினங்களுக்கு முன்னர் இந்தக் காருடன் ஒரு பெண் காணப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இருப்பினும் காரின் உரிமையாளர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.