;
Athirady Tamil News

பாக்கு விற்பனை நிலையங்களால் வவுனியாவில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

0

வவுனியா (Vavuniya) – பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி கரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான ஒருவகை பாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றது.

குறித்த வியாபார நிலையங்களுக்கு வருகைதரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளை அண்மித்து நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

வாகன நெரிசல்
பிரதான வீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள் சென்றுவருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் அங்கு பாக்கினை கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன் அடிக்கடி விபத்துகளும் இடம்பெற்று வருகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பாக காவல்துறையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாக்கு விற்பனை நிலையங்களில் ஒருவகை போதைப்பாக்கு விற்பனை இடம்பெறுவதாக தெரிவித்து கடந்த காலங்களில் வவுனியா காவல்துறையினரால் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.