;
Athirady Tamil News

நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்துள்ள கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.