;
Athirady Tamil News

இலங்கையைவிட்டு அவசரமாக வெளியேறும் இஸ்ரேலிய பிரஜைகள்!

0

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையினை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அறுகம்பை பகுதியில் வைத்து இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த்து.

இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது

மேலும் இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்ததையடுத்து குறித்த இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஒரு நிலையான கால அட்டவணைக்கமைய விமானங்கள் இல்லாததால், அவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து இஸ்ரேல் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.