;
Athirady Tamil News

அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்த ரூ.15 லட்சம்.., இது தெரியாமல் சொந்தக்காரர் செய்த காரியம்

0

திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை மறைத்து வைத்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்

தமிழக மாவட்டமான கடலூர், வடலூரில் சண்முகா அரிசி மண்டி என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம் ஆவார்.

இவர், திருடனுக்கு பயந்து தனது கடையில் உள்ள அரசி மூட்டையில் ரூ.15 லட்சம் பணத்தை மறைத்து வைத்துள்ளார். அவர், ரூ.10 லட்சம் பணத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சம் பணத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்துள்ளார்.

இதனையடுத்து, அடுத்த நாள் சண்முகத்தின் உறவினர் ஒருவர் கடையின் நின்றுள்ளார். அந்த நேரத்தில், வாடிக்கையாளர் வந்தபோது பணம் இருந்த அரசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

பின்னர், கடைக்கு வந்த சண்முகம் அரிசி மூட்டை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர், விசாரித்த போது தான் கடையில் நின்ற உறவினர் அதனை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்தார். அவர், தனக்குரிய ரூ.5 லட்சம் பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.