;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்

0

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (24.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.|

இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாகவுள்ளதால், பாராளுமன்ற தேர்தல வாக்களிப்பு முறை பற்றிய விழிப்புணர்வுத் திட்டத்தை பிரதேச செயலக ரீதியாக மக்கள் மத்தியில் முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு பிரதேச செயலகர்களின் ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதேச செயலக பிரிவு ரீதியாக தேர்தல்கள் முறைப்பாட்டு பிரிவுகளை பிரதேச செயலகங்களில் ஸ்தாபிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ் அவர்கள் மற்றும் அனைத்துப் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.