;
Athirady Tamil News

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(24.10.2024) காலை 10.00மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

நீதி வேண்டி போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.