;
Athirady Tamil News

அது நடந்தால் மூன்றாம் உலகப்போர் வந்துவிடும்! மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆபத்தாகிவிடும் – டிரம்ப்

0

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவை மூன்றாம் உலகப்போரில் ஈடுபடுத்துவதற்கு உத்தரவாதம் இருப்பதாக டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் பேரணி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் பேசினார்.

அவர் கமலா ஹாரிஸை கடுமையாக சாடினார். அக்டோபரில் இருந்து கமலா ஹாரிஸுடன் உருவான மோதல்கள் போன்ற கடந்தகால வாதங்களை டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டார்.

போரிடத் தயாராகிவிடுவார்கள்

அவர் பேசும்போது, “கமலா ஹாரிஸை ஜனாதிபதியாக்குவது என்பது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சூதாடுவதாகும். அவர் எங்களை மூன்றாம் உலகப்போரில் ஈடுபடுத்துவார். ஏனென்றால் அவர் வேலையை செய்ய திறமையற்றவர்.

பொதுமக்களின் மகன்களும், மகள்களும் நீங்கள் கேள்விப்பட்டிராத ஒரு நாட்டில் போருக்குப் போரிடத் தயாராகிவிடுவார்கள். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிச்சயமாக மூன்றாம் உலகப்போரைத் தடுப்பேன்” என தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பிறகு, ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.