;
Athirady Tamil News

டெல் அவிவ் நகரில் பயங்கர லொறி விபத்து: ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0

டெல் அவிவ் நகரில் நகரில் நடந்த லொறி மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

டெல் அவிவ்-வில் சாலை விபத்து

ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவ் வடக்கே ஒரு பயங்கரமான லொறி மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதுடன் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர், அதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து அவசர சேவை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ உதவிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் கில்லோட் இஸ்ரேலிய இராணுவ தளத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்துள்ளது.

விபத்து ஏற்படுத்திய லொறி பேருந்து நிறுத்தத்தில் மோதியதால் பலர் வாகனத்தின் கீழ் சிக்கினர்.

இந்த சம்பவத்தை வேண்டுமென்றே நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயலாக அதிகாரிகள் இன்னும் வகைப்படுத்த வில்லை என்றாலும், சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தீவிர விசாரணையில் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.