;
Athirady Tamil News

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

0

நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியொருவர் கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நெருக்கடியான பிரச்சினை
“ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் மக்களின் மிக நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது.

தற்போது பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்கள் கூட நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

நாட்டு மக்கள்
இவ்வருட பொதுத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க பிரதிநிதிகள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து அவர்களின் நலனுக்காக உழைத்தவர்களை நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்.

புதிதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், முன்னாள் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோருகிறார்.

கடந்த அரசாங்கங்கள் அரசியலை வியாபாரமாக மாற்றியதால், முன்னாள் அரசியல்வாதிகள் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை மட்டுமே செய்யப் பழகினர்,

எனவே அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் புதிய குழுவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.