;
Athirady Tamil News

லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு

0

லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக்காலை(27) உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.