;
Athirady Tamil News

வெளிநாட்டு மோகத்தால் 61 இலட்சத்தை இழந்த யாழ் இளைஞன்!

0

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் சந்தேகநபர்கள் எடுக்கவில்லை.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் , பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்களை நேற்றைய தினம் (16) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.