;
Athirady Tamil News

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்

0

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பல்கலை கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை , மரபுவழித்தாயகம் , தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்ட நாளினை நினைவு கூறும் முகமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.