;
Athirady Tamil News

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20-01-2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் (25) ஆம் திகதி நடைபெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டு கிழக்கு மாகாண ஆளுனர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.