இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஆணும் பெண்ணும் கைது

இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ 750 கிராம் குஷ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, அதே விமானத்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ 880 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான 31 வயதான ஆண், மகாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 29 வயதான பெண் கட்டுவன பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.