;
Athirady Tamil News

அமெரிக்காவில் 538 பேர் கைது!

0

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை நாடு கடத்தியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது; பயங்கரவாத அமைப்பினர், பாலியல் குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியது, “வரலாற்றில் மிகப்பெரிய பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை நடக்கும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.