பொதுமக்களின் அழைப்புக்களுக்கு பதல் வழங்குங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்து

முடிந்தவரை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரச அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்க அமைச்சர்கள் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.