;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 1000 கிலோ வெடிகுண்டு அனுப்ப உத்தரவு: ட்ரம்பின் அதிரடி முடிவு

0

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தடை விதித்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி போர் தொடங்கியது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் உலக நாடுகளின் தலையீட்டை அடுத்து 6 வார கால போர் நிறுத்தமானது காசாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தாலும், போர் கால அழிவுகள் தீவிரமடைவதை தடுக்கும் விதமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு தடை விதித்து இருந்தார்.

வெடிகுண்டுகள் அனுப்பி வைப்பு
இந்நிலையில், புதிய அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நிறுத்தி வைத்திருந்த 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் படி, இஸ்ரேல் கொடுத்துள்ள பணத்திற்கான வெடி குண்டுகளை அனுப்ப வைக்க உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பாலஸ்தீன அகதிகளுக்கு அண்டை நாடுகளான ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகள் அடைக்கலம் வழங்குமாறும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.