;
Athirady Tamil News

திருநெல்வேலியில் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளை

0

மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு , அவரிடமிருந்த ஒன்றரை பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு, சூரிய மின்சக்திகலம் (சோலர்) திருத்த என கூறி சென்ற இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து 12 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.