;
Athirady Tamil News

சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

0

குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது குறித்த பெண் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளானது வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கல்டென்வெவ பகுதியிலிருந்து ஹிரிபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருணாகல், நிக்கதலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.