;
Athirady Tamil News

புலம்பெயர்ந்தோரால்… பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

0

கட்டுக்கடங்காத புலம்பெயந்தோர் வருகையால் ஏழு ஆண்டுகளுக்குள் பிரித்தானியாவின் மக்கள் தொகை 72.5 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.

புலம்பெயர் மக்களின் வருகை
வெளியான தரவுகளின் அடிப்படையில், அடுத்த 7 ஆண்டுகளில் மக்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகமாகும் என்றே தெரிய வந்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளின்படி, அடுத்த கால் நூற்றாண்டில் மக்கள்தொகை உயர்வுக்கு வெளிநாட்டு வருகை மட்டுமே ஒரே காரணமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகள், சர் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் மீது புலம்பெயர் மக்களின் வருகையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கோபத்தையும் அழுத்தத்தையும் தூண்டியுள்ளது.

வெளியான புள்ளிவிபரங்களில், 2022ல் 67.6 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2032ல் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2032ல் ஏற்படும் 4.9 மில்லியன் அதிகரிப்பு என்பது, ஷெஃபீல்ட் அளவிலான 10 நகரங்களை இறக்குமதி செய்வதற்குச் சமமாகும்.

விசா எண்ணிக்கை
நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவிற்கு 9.9 மில்லியன் பேர் வருகை தருவதாலும், 4.9 பேர் வெளியேறுவதாலும் ஏற்படுகிறது. இதனிடையே, முதன்மையான அரசியல்வாதி ஒருவர் குறிப்பிடுகையில், 10 ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் பிரித்தானியாவில் புலம்பெயர்வது என்பது மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையில் ஒரு சட்ட வரம்பு நமக்குத் தேவை என்றும், இது எண்ணிக்கைகளைக் குறைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு உதவும் என்றும் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த திட்டம் அதிர்ச்சியளிப்பதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. இது செயல்படுவதைத் தடுக்க முடியும், தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.