;
Athirady Tamil News

பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்: 400 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

0

தொடர்ச்சியாக வீசிவரும் புயல்களால் பிரான்சின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்
பிரான்சிலுள்ள நார்மண்டி மற்றும் பிரிட்டனி ஆகிய பகுதிகள், தொடர்ச்சியாக வீசிவரும் புயல்களால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நேற்று ஆறுகளிலும் பிற நீர் நிலைகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆகவே, படகுகள் உதவியுடன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Herminia புயல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவின் சில பகுதிகளை துவம்சம் செய்துவருவதால், வானிலை ஆராய்ச்சி மையங்கள், பெருவெள்ளம் மற்றும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.

ஏற்கனவே வீசிய Eowyn புயலால், நார்மண்டி மற்றும் பிரிட்டனி ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது Herminia புயல் அதே பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

Herminia புயல் காரணமாக பிரான்சின் சில பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. Rennes என்னும் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள வீடுகளில் வாழும் மக்கள் சுமார் 400 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

கடந்த 40 ஆண்டுகளில் இதுபோல் ஒரு பெருவெள்ளத்தைப் பார்த்ததில்லை என்று கூறும் அந்நகர மேயர், புதன்கிழமை வரை இந்த வெள்ளம் வடிய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.