;
Athirady Tamil News

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

0

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ முதல்முதலில் உருவான ஈட்டன் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டது தற்போது தெரியவந்துள்ளது; இருந்தாலும் அதுதான் காட்டுத் தீயை உருவாக்கியதா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தனா்.

கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 57,528 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.