;
Athirady Tamil News

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

0

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌனி அமாவாசை நீராடலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே பக்தா்களின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட அதிகரித்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், மௌனி அமாவாசையை முன்னிட்டு இரண்டாவது அமிர்த ஸ்னானத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்களும் குழந்தைகளும் உள்பட ஏராளமான பக்தர்கள் காயமடைந்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் விரைவாக அனுப்பப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.