;
Athirady Tamil News

அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

0

அநுராதபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர்கள் அநுராதபுரம் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அவர்களில் ஒருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளார்.

இது குறித்து, அவருடன் வந்த ஏனைய சுற்றுலா பயணிகள் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதன் போது அவர் யாழ்ப்பாணம் வரும் புகையிரதத்தில் மாறி ஏறி யாழ்ப்பாணம் வந்தமை விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து , அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.