;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

0

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் இருந்து, 40 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.