;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்

கடந்த வாரம் அனுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது.

அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அருச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அருச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டு இருந்தது.

இந்நிலையில், அனுராதபுர பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து , அனுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.