நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-18-17-19.png)
மோட்டார் போக்குவரத்துத் துறை, இலங்கை மக்களுக்கு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற குறித்த தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் முறையீடுகள்
திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளையும் குறித்த எண்ணிற்கு அனுப்பலாம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 0714033300 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறித்த புகார்கைளை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.