;
Athirady Tamil News

மாறுவேடம் அணிந்து 14 பேருக்காக குடியுரிமைத் தேர்வில் பங்கேற்ற பெண் கைது

0

பழைய தமிழ் திரைப்படங்களில், கதாநாயகன், கதைப்படி, தன்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் வருவார்.

அவர் போடும் மாறுவேடம், கன்னத்தில் பெரிய மரு ஒன்றை ஒட்டவைப்பதுதான். மரு இருந்தால் ஒரு ஆள், மருவை எடுத்துவிட்டால் வேறு ஒரு ஆள் என திரைப்படம் பார்ப்பவர்கள் நம்பவேண்டுமாம்.

விடயம் என்னவென்றால், உண்மையிலும் இதேபோல ஒரு விடயம் பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளது.

மாறுவேடம் அணிந்து குடியுரிமைத் தேர்வில் பங்கேற்ற பெண்
ஒரு பெண், மாறுவேடம் அணிந்து 14 பேருக்காக குடியுரிமைத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

அவர் அணிந்த மாறுவேடம், தலையில் வெவ்வேறு விக் (Wig) அணிந்ததுதான்.

விக் அணிந்து வெவ்வேறு இடங்களில் நடந்த குடியுரிமைத் தேர்வில் பங்கேற்றுள்ளார் அந்தப் பெண். விடயம் என்னவென்றால், ஆண் வேடமும் போட்டுள்ளார் அவர்.

அவர் எப்படி சிக்கினார் என்பது தெரியவில்லை. என்றாலும், அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு பல விக் மற்றும் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பணத்துக்காக அவர் இந்த வேலையைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அந்த 61 வயதுப் பெண், உள்துறை அலுவலக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.