;
Athirady Tamil News

யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிநபர்களிடம் அனுமதிப்பத்திரத்துடன் கூடிய 1,697 துப்பாக்கிகள் உள்ளன. அத்துடன், துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 1,550 என தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, எண்ணிக்கை சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்காக அவற்றில் 1,368 துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சரிபார்ப்புக்காக 182 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, யோஷித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இரண்டு துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அதனை ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் மீளாய்வின் பின்னரே துப்பாக்கிகளை மீள வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.