;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார். இந்தநிலையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் இன்றைய தினம் பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதன்போது, பதவி விலகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் அவர் மீண்டும் பீடாதிபதியாக பதவியேற்பதற்கு உரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அங்கீகாரத்தை பல்கலைக்கழக பேரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உயர் கல்வியமைச்சு கோரிய அறிக்கையை அந்த அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வகுப்பு புறக்கணிப்பு தொடர்வதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதென அறியமுடிவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாளைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின் பின்னரே தங்களது சங்கம் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.