;
Athirady Tamil News

ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்… முன்னேறும் புடின் படைகள்

0

கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் மொத்தமாக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலுவான நிலையில்
குறித்த நகரமானது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவிடம் சிக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதனால், உக்ரைனின் மொத்த தளவாட விநியோகமும் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது என்றே தெரிய வந்துள்ளது.

ஆனால் உக்ரைன் தரப்பு கடுமையாக போராடி நகரத்தைப் பாதுகாத்து வரும் அதே வேளையில், போக்ரோவ்ஸ்க் நகரின் வீழ்ச்சி ரஷ்யாவை கிழக்கில் பல திசைகளிலும் தாக்குதல்களை நடத்த வலுவான நிலையில் வைக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது உக்ரைனை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மொத்தம் 60,000 மக்கள் வசித்து வந்த போக்ரோவ்ஸ்க் நகரில் தற்போது வெறும் 7,000 மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

கடைசியாக செயல்பட்ட அஞ்சல் நிலையமும் சமீபத்தில் மூடப்பட்ட நிலையில், இராணுவ வாகனங்களில் தபால் சேவை முன்னெடுக்கப்படுகிறது. நகரின் இருபுறமும் ரஷ்ய தாக்குதல் வட்டத்தில் வந்துள்ளது.

தடுமாறும் உக்ரைன்
பெரும்பாலான வாகனங்கள் தற்போது தங்கள் பாதுகாப்பிற்காக போக்ரோவ்ஸ்க் நகரின் பின்புற சாலைகளில் மாற்றுப்பாதையில் செல்கின்றன. கடந்த பல நாட்களில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான தளவாட மையமான டினிப்ரோ நகரத்திலிருந்து நகரத்திற்குள் வரும் பிரதான ரயில் பாதையை அடைந்துள்ளன.

மேலும், போக்ரோவ்ஸ்கின் சாலை மற்றும் ரயில் இணைப்புகள் உக்ரைனின் முன்னணிப் படையின் பெரும் பகுதிக்கு ஒரு முக்கியமான விநியோக மையமாக மாற்றப்பட்டிருந்தன.

ஆனால் ரஷ்யாவின் முன்னேற்றம் தற்போது உக்ரைனை தடுமாற வைத்துள்ளது. போக்ரோவ்ஸ்க் நகரம் கைப்பற்றப்பட்டால், அது உக்ரைனுக்கு பேரிடியாக மாறும் என்றே அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.