;
Athirady Tamil News

யாழில் இறந்த நிலையில் கரையுதுங்கும் ஆமைகள்!

0

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.