31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்தில் 190 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.