;
Athirady Tamil News

2 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

0

காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 2 பேரை இன்று விடுதலை செய்துள்ளனர்.

அதன்படி, ஆபர் கல்டரோன் (வயது 54), யர்டன் பிபஸ் (வயது 35) ஆகிய 2 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அமெரிக்க இஸ்‌ரேலியரான கீத் சீகல் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட கெல்டரோன் பிரான்ஸ் மற்றும் இஸ்‌ரேலியக் குடியுரிமை பெற்றவர். அவரையும் பிபாசையும் காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் செஞ்சிலுவை அதிகாரியிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது

சீகல் அதே நாளன்று காஸா நகர் துறைமுகத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தி பலரைப் பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.

பிணைக்கைதிகளில் ஆக இளையர்களான ஒன்பது மாத குழந்தையான கிஃபிர், நான்கு வயது ஏரியல் ஆகியோரின் தந்தை, பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்ட பிபாஸ் ஆவார்.

பிபாசின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியுமான ஷிரியும் இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 182 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹமாஸ் கூறியது. போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டமாக 33 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 17 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.இதுவரை 400 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.