;
Athirady Tamil News

யாழ். பல்கலையில் மோதல்: இரு மாணவர்கள் வைத்தியசாலையில்!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதன்போது நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக
மாறியதில் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.