மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்பிட்டமுல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடையிலிருந்து வெயாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் படுகாயமடைந்துள்ள நிலையில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கம்பஹா, திவுலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்நிலையில், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.