;
Athirady Tamil News

காங்கோ: கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

0

கோமா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன்னேற்றம் கண்டுவரும் அவா்கள், தெற்கு கீவு மாகாணத்தின் கோமா நகரை கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பற்றினா். பின்னா் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கவுமு நகரின் விமான நிலையத்தைக் கைப்பற்றியதாக எம்23 கிளா்ச்சிப் படையினா் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி தொடா்ந்து முன்னேறி வந்த அவா்கள், அந்த நகரை தற்போது கைப்பற்றியுள்ளா். அவா்கள் நகருக்குள் வருவதற்கு முன்னதாக அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினா்.

காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், தங்கள் சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

You might also like

Leave A Reply

Your email address will not be published.