;
Athirady Tamil News

லொறியும் காரும் மோதி விபத்து; 15 பேரின் நிலை

0

இன்று (25) பிற்பகல் திஸ்ஸமஹாராம – கதிர்காமம் வீதியில் 07ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிய லொறியும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், லொறியில் பயணித்த 10 பேரும் காரில் பயணித்த 5 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.