யாழ் சிறுவன் முல்லைத்தீவில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து இன்று(26) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.