;
Athirady Tamil News

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவானுக்கு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை குறித்து கொழும்பு குற்றப்பிரிவு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.